Friday, March 19, 2010

மழை வேண்டாம்.....!!!


வான் மேகங்களே......!

இன்று மழை வேண்டாம்......!


நினைவிருக்கிறதா?

உங்கள் வரவினில்

குதூகலிக்கும்- அதே

மழைக்காதலன் பேசுகிறேன்......!!!


சற்று தள்ளிப்போடுங்கள்.....

இன்று மழை வேண்டாம்......!


வரும் வழியில் விவசாயி ஒருவன்

விளைந்த நெல்

வீணாகி விடுமென்று

புலம்பிக்கொண்டிருக்கின்றான்.....!


கூரை வேய்வதற்குள்

கொட்டித்தீர்த்துவிடுமோவென்று

மற்றொருவனும்.......


தள்ளாடிய வயதில்

குடை கொண்டு வர

மறந்துவிட்டதாக

ஒரு கிழவியுமாய்....

தொடர்ந்து கொண்டிருக்க......



மழை வருமென்று

கழுதைக்கும் கழுதைக்கும்

கல்யாணம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்

இவ்வீணர்களின் மூடநம்பிக்கையை

விரட்டியடிக்கவேணும்.........


சற்று தள்ளிப்போடுங்கள்.....!

இன்று மழை வேண்டாம்.....!!!

2 comments: