Saturday, March 13, 2010

விடிந்த பின்னும்........!



அழகான கார்காலத்து

மாலைப்பொழுதொன்றில்

எதிர்பாராத அந்த  

முதல் சந்திப்பில்

இடைவிடாது

கொஞ்சும் பேச்சில்

மழையாய்

என் மனசுக்குள்

கொட்டித்தீர்க்க........

காதலின் தூர விலகித்திரிந்த

என் மீது

அனிச்சையாய்

ஒரு தடை உத்தரவு பிறப்பித்து

அவசரநிலைப்பிரகடனமொன்றில்

மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்ட

 என்

முடிவொன்றின்

மறுவடிவம் தந்து மறைந்தாள்......



அவ்வழகான நிகழ்வெந்தன்

அடிமனதில் பதிந்திருக்க

விடுபட மனமின்றி

திசையெங்கும்

நிறைந்திருக்க

வழக்கத்திற்கு மாறாக

கல்லும் கண்ணயரும்

பின்னிரவும் ,

இளங்காலையும்

புணரும் விவரிக்கமுடியாத

 பொழுதொன்றில்

அவளே ... அவள்!

என் கனவுக்குள்

பலமுனைத்தாக்குதல்களை

தொடுத்திருக்க

இன்னும்...

விடிந்த பின்னும்.....

படுக்கையறையில்

கவிழ்ந்துகிடக்கிறேன்!

அவளிடம் இழந்திருந்த

இதயத்தின் நிலப்பரப்பை

திரும்பப்பெற மனமின்றி........!

No comments: