Saturday, March 20, 2010
கவிதையாதலின் வழியில்..........!!!
எழுத்துக்கள் வார்த்தைகளாகி
வார்த்தைகள் வாக்கியங்களாகி
வாக்கியங்கள் கவிதையாகும் வழியில்
முடிவுறாமல் தடுமாறுகிறதென் முயற்சி.....
முயற்சியின் தொடர்ச்சியாய்
உன் கால் கொலுசை
வழித்துணையாக்கி
முட்டி மோதி
எப்படியோ
முடித்து விட்டேன்
கவிதையின் முற்றுப்புள்ளி வரை.....
புன்னைகையில் ஒன்றும்
கூந்தலில் பூவைப்பதில் என்றும்
முரண்பாடுகளுக்கென ஒதுக்கி முறைப்பது வரை
எப்படி உன்னால் மட்டும்
உபகரணங்கள் ஏதுமின்றி
நொடிக்கொரு கவிதையை
அரங்கேற்ற முடிகின்றதோ.....!!!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒவ்வொரு கவிதையும் அற்புதமாக இருக்கிறது..
//Anbinnayagan said...
ஒவ்வொரு கவிதையும் அற்புதமாக இருக்கிறது..//
அன்பின் நாயகன் .... தங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றிகள்!!!
ஆஹா !!
//ஆறுமுகம் முருகேசன் said...
ஆஹா !!//
நன்றி ஆறுமுகம்!!!
கவிதயாதலின் வழியில்
கவிதையின் ஊர்வளம்..
// அன்புடன் மலிக்கா said...
கவிதயாதலின் வழியில்
கவிதையின் ஊர்வளம்... //
தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் மலிக்கா!
Post a Comment